செஞ்சி அருகே நடந்த சாலைவிபத்தில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
செஞ்சி: செஞ்சி அருகே நடந்த சாலை விபத்தில் 6 விவசாயிகள் பலியானார்கள்.
விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர் பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் 20 பேர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை பூஜைக்காக 2 ஆட்டோவில் சென்றனர்.
பூஜையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, செஞ்சி-திண்டிவனம் சாலையில் எதிரே வந்த லாரி, இவர்கள் வந்த ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் செஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications