கருணாநிதியின் கோபாலபுரம் வீடு அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு!

இதுதொடர்பான தானப் பத்திரத்தில் இன்று முதல்வரும், அவரது மனைவி தயாளு அம்மாளும் கையெழுத்திட்டு அதை ஐவர் குழுவிடம் வழங்கினர்.
தான் மற்றும் தனது மனைவியின் காலத்திற்குப் பிறகு கோபாலபுரம் வீட்டை தானமாக அளிப்பதாகவும், அங்கு இலவச மருத்துவமனை உருவாக்கப்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தனது வீட்டை தானமாக அளிக்கும் பத்திரத்தில் அவரும், மனைவி தயாளு அம்மாளும் கையெழுத்திட்டனர்.
முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்திற்குப் பிறகு இந்த இல்லம் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும்.
அந்த மருத்துவமனைக்கு கலைஞர் மருத்துவமனை என்று பெயரிடப்படும். இந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் பொறுப்புக்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை என்ற புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் ராம நாராயணன், ரங்கநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் வாசித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வசர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார்.
கடந்த ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து கடந்த ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.
இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும்.
இந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவு நிகழ்ச்சியின்போது துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ராசா, உயர் நீதிமன்ற அட்கேட் ஜெனரல் ராமசாமி, வழக்கறிஞர்கள் சுதர்சனம், பழனியாண்டவன், பத்திரப் பதிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிகரன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications