ராஜ்யசபா: ராஜஸ்தான் பாஜக வேட்பாளராக ராம் ஜேத்மலானி- கட்சியிலேயே எதிர்ப்பு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில், ராஜ்யசபாவுக்குப் போட்டியிடுகிறார். ஆனால், இதற்கு பாஜகவிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள பாபர் மசூதி வழக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான குஜராத் மதக் கலவர வழக்கு ஆகியவற்றில், இந்த இருவர் சார்பிலும் ராம் ஜேத்மலானி வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜேத்மலானியை ராஜ்சயபா வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் என்பதாலும் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், நான் வாஜ்பாயின் ஆசிர்வாதத்துடன் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று ஜேத்மலானி கூறியுள்ளார்.
மம்தாவுக்கு அத்வானி அறிவுரை:
இந் நிலையில் மேற்கு வங்க சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துமாறு கோர வேண்டாம் என்று திரணமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு அத்வானி அறிவுரை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள நகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்காள சட்டசபை தேர்தலை, முன்கூட்டியே நடத்துமாறு மம்தா கோரி வருகிறார்.
இந்நிலையில், இது குறித்து அத்வானி தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது:
மேற்கு வங்காள நகராட்சி தேர்தலில், மம்தாவுக்கு கிடைத்த வெற்றிக்கு அவரது செயல்பாடுகள் காரணமல்ல. பொது மக்களிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விலகிச்சென்று விட்டதே காரணம்.
இந்த வெற்றி மூலம் மம்தா பானர்ஜி சரித்திரம் படைத்துள்ளார். அவர் வங்காளத்தை ஆள்வார் என்று வரும் செய்திகள், எதிர்காலத்தில் உண்மை ஆகக்கூடும். அவர் வங்காள ராணியாகவும் ஆகலாம்.
ஆனால், சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திக்க வேண்டும் என்று அவர் அவசரப்படக்கூடாது. பொறுமையாக இருந்தால், அவருக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார் அத்வானி.
நம்பிக்கைக்குரிய கட்சியாக இருப்போம்-மம்தா:
இந் நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் நம்பிக்கைக்கு உரிய கட்சியாக இருப்போம். பதவி காலம் முடியும் வரை இந்த கூட்டணியை ஆதரிப்போம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் கூட்டணி ஏற்படவில்லை என்பதை யாரும் திசை திருப்ப வேண்டாம்.
இப்போது ஒன்றும் முடிந்து போகவில்லை. நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நம்பிக்கைக்கு உரிய கட்சியாக நீடிப்போம். மத்தியில் இந்த கூட்டணியின் பதவி காலம் முடியும் வரை ஆதரிப்போம். இந்த முடிவில் மாற்றம் இல்லை. நாங்களாக வெளியேற மாட்டோம்
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள முழு முயற்சிகளை மேற்கொள்வோம். எங்களை நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல என்று சிலர் கூறி வருகிறார்கள். அது உண்மை அல்ல. நாங்கள்தான் மற்றவர்களை விட நம்பத்தகுந்தவர்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications