பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
மதுரை: விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஜூன் 29 ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், நில உச்சவரம்பு சட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்டு, நிலக்குவியல் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு நடைபெற்று வருகிறது. நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் சுமார் 5000 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டியில் செல்வாக்கு மிக்கவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் நிலம் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு கடந்த 40 ஆண்டு காலமாக பட்டா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் இதர சமூகத்தைச் சார்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்க போடப்பட்ட உத்தரவுகள் ஏட்டளவிலேயே உள்ளது.
விவசாயிகளுக்கு சொந்தமான பட்டா நிலம் அவர்களுக்கு தெரியாமலேயே தூத்துக்குடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மோசடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு தரிசு நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் பல பெரிய மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காவேரி ராஜபுரத்தில் நீதிபதி பி.டி. தினகரனால் 200 ஏக்கர் ஆக் கிரமிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட பிறகும் இதை மீட்க தமிழக அரசு சிறிய முயற்சி கூட எடுக்கவில்லை.
வனஉரிமைச்சட்டத்தை அமல்படுத்தி, ஆதிவாசி மக்களுக்கும் வனத்தைச் சார்ந்து வாழும் மற்றவர்களுக்கும் பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும்.
இந்த நிலையில் பட்டா நிலத்தில் உள்ள குடிசை வீடுகளை மட்டுமே கான்கிரிட் வீடுகளாக மாற்றித் தரப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே, அனைத்து வகையான புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்கி, கான்கிரிட் வீடு கட்டித்தர வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதே போன்று, திருநெல்வேலி, தூத்துக்குடி , சிவகங்கை, தேனி , காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications