Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹாக்கி பயிற்சியாளர் மீதான செக்ஸ் புகார் விசாரண-விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

Kaushik
டெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கெளசிக் மீதான ஹாக்கி இந்தியாவின் விசாரணை பெரும் அதிருப்தி அளிப்பதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே தனியாக ஒரு விசாரணையை நடத்த அது திட்டமிட்டுள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் உள்ளிட்டோர் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை தலைமையில் 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பரபரப்பு புகார் கூறியிருந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த நான்கு பேர் கொண்ட கமிட்டியை ஹாக்கி இந்தியா அமைத்தது. இந்த விசாரணைக்கு முன்னதாகவே பசவராஜ் நீக்கப்பட்டார். கெளசிக் தானாக பதவி விலகி விட்டார்.

விசாரணைக் கமிட்டியின் விசாரணையில் கெளசிக் மீது தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹாக்கி இந்தியாவிடம் விசாரணைக் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் ஹாக்கி இந்தியா, இந்தப் பரிந்துரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னிஷ்டப்படி ஒரு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதனால் விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல ஹாக்கி இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகமும் அதிருப்தி அடைந்துள்ளதாம். ஹாக்கி இந்தியா அமைப்பே ஒரு இடைக்கால அமைப்பு என்பதால் அதன் முடிவுகள் சட்டப்பூர்வமானதாக இருக்காது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.

எனவே கெளசிக் தொடர்பாக ஹாக்கி இந்தியா அனுப்பும் அறிக்கைக்குப் பின்னர் தனியாக ஒரு உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தரவிடவுள்ளதாம்.

ரஞ்சிதா தேவியின் புகார்கள் சத்தியமானவை

இதற்கிடையே, வீராங்கனை ரஞ்சிதா தேவி கூறியுள்ள செக்ஸ் டார்ச்சர் புகார்கள் நம்பகமானவை, உண்மையானவை என்று ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரஞ்சிதாவின் புகாரை நாங்கள் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளோம்.அவருடைய எழுத்துப்பூர்வமான பதில்களும், குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களும் நம்பகமானவை, உண்மையானவை.

எங்களது விசாரணை அறிக்கையின் நகலை போலீஸ் ஆணையருக்கு மேல் விசாரணைக்காக அனுப்பியுள்ளோம். மத்திய விளையாட்டு அமைச்சக செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எங்களால் செயல்பட முடியாது. கெளசிக் உள்ளிட்டோர் மீது மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் விளையாட்டு அமைச்சகத்திற்கே உள்ளது. மேலும் டெல்லி போலீஸ் ஆணையர் இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக கையாளவும் பரிந்துரைத்துள்ளோம்.

உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கமிஷனரைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

எதிர்காலத்தில் கெளசிக், பசவராஜ் உள்ளிட்டோரின் சேவையை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.

உதவிப் பயிற்சியாளர்கள் இருவர் புகார்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளனர். அதில் ஒருவர், விபச்சாரப் பெண்களுடன் இருப்பவர் பசவராஜ்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மகளிர் அணி கேப்டனுடன் நான் பேசினேன். அதற்கு அவர் ரஞ்சிதாவுக்கு அனைத்து வீராங்கனைகளும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+