தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணமாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்த நிர்ணயத்தை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி ஆலோசனைகளை நடத்தி கட்டண விகிதத்தை அரசுக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற அரசு அவற்றை நடைமுறைப்படுத்தி அரசாணையை வெளியிட்டது.
ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக பழைய கட்டணமே வசூலிப்போம் என அறிவித்தன. மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், கோவிந்தராஜன் கமிட்டியின் கட்டணத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications