மழையால் பயிர் சேதம் ஏக்கருக்கு ரூ.25,000 தர ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளச் சேதம் குறித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களின் அறிக்கையின்படி தான் வெள்ள நிவாரணம் குறித்து முடிவு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வெள்ளத்தால் பல பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரண நிதி வழங்க வேண்டும். வீடுகளை இழந்து தற்போது அரசு முகாம்களில் இருப்பவர்கள் வீடு திரும்புகையில் குடும்பத்துக்கு 10 லிட்டர் மண்ணெண்ணெயும், 30 கிலோ அரிசியும் இலவசமாக வழங்க வேண்டும்.
மேலும், முகாம்களி்ல் தங்கியிருப்பவர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தது ரூ.10,000மும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளது. எனவே, இனி சாலை போடும்போது அவை குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது சேதமடையாமல் இருக்க வேண்டும் என்று சாலை போடும் காண்ட்ராக்டர்களுக்கு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு மழைக் காலத்தில் சேதமடையும் சாலைகளை சீரமைக்க செலவளிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications