வீட்டு வசதிவாரிய நில ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை-அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி

தமிழக வீட்டு வசதிவாரிய வீடுகள்,வீட்டுமனைகள் ஆகியவற்றை நீதிபதிகள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக ஒதுக்கியதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் அமபலப்படுத்தியுள்ளார் கோபாலகிருஷ்ணன் என்பவர். யார் யாருக்கு எப்படியெல்லாம் வீடுகளும், வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டன, என்னமாதிரியாக விதிகள் மீறப்பட்டுள்ளன என்ற விவரமும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமியிடம் கேட்டபோது, எனது அலுவலகத்துக்கு உரிய ஆவணத்தோடு (ஆதாரம்) வந்து என்னை பாருங்கள். அப்பழுக்கற்ற அதிகாரி என்று தனக்குத் தானே ஒரு அதிகாரி சான்று கொடுத்து வீடு பெற்றதை பற்றி கேட்கிறீர்கள். அப்படி அவர்களே உத்தரவாதம் தரலாம். இது தொடர்பாக அலுவலகத்துக்கு வந்து டாக்குமென்டோடு பேசலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஒதுக்கீட்டில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் ஒதுக்கீடு நடந்துள்ளது என்றார்.
நிறைய வீடு வைத்திருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அரசு ஒதுக்கீடு செய்யும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் குறிப்பிட்டு புகார் கொடுங்கள். அரசு பரிசீலித்து உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கும் என்று மறுத்தார்.
தமிழக அரசின் 2 ஏக்கர் நில ஒதுக்கீடு திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறதே என்ற இன்னொரு கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தருவதற்கே அந்த திட்டம். நீங்கள் டாக்குமென்டோட வாருங்கள்.
தொலைக்காட்சி செய்தியில் இது தொடர்பாக சொல்வது அனைத்தும் போகஸ்தான் (போலி). நான் இதனை கண்டிப்பாக எதிர்கொள்வேன். உண்மையான ஆவணங்களை கொடுங்கள். தவறு ஏதேனும் இருந்தால் கலைஞர் அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த ஒரு ஆவணத்திலாவது தவறு இருந்தால் அதை குறிப்பிட்டு காட்டி நிரூபியுங்கள். எனது துறை அதிகாரிகளிடம் அது பற்றி மனு கொடுத்தால் அரசு கவனிக்கும் என்று தெரிவித்தார் பெரியசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications