சட்டமன்றத் தேர்தல்-ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஒரே நேரத்தில் 68 உயர் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இத்ல 34 அதிகாரிகளுக்கு பதவி உயர்வோடு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் விதி.
இதையடுத்து ஒரே நாளில் 68 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயாலளர் கே.ஞானதேசிகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏ.டி.ஜி.பிக்கள் ஷ்யாம் சுந்தர், விபாகர் சர்மா ஆகியோர் டி.ஜி.பிக்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள 8 பேர் ஐ.ஜிக்களாகவும், எஸ்.பி பதவியில் இருந்து 14 பேர் டி.ஐ.ஜிக்களாகவும்,
கூடுதல் எஸ்.பி, இணை எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள 10 பேருக்கு எஸ்.பியாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக ஏ.பாரியும், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக மாசானமுத்துவும், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக வி. வரதராஜுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டி.ஜி.பியாக பணியாற்றும் ஷியாம் சுந்தர், டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று, அமலாக்கப்பிரிவு டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கும் தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி கழக மேலாண்மை இயக்குனர் விபாகர் சர்மா பதவி உயர்வுபெற்று தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பார்.
சென்னை ரயில்வே துறையில் எஸ்.பியாக பணியாற்றிய ஏ.ஜி. மௌரியா, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய பொன்மாணிக்கவேல், விழுப்புரம் சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஏ.ஐ.ஜியாக இருந்த செந்தாமரைக்கண்ணன், சென்னை ஆயுதப்படை காவல்துறை டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சென்னை ஆயுதப்படை பிரிவின் டி.ஐ.ஜியாக இருந்த வி.ஏ. ரவிக்குமார், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய திருஞானம், சென்னை போலீஸ் பயிற்சி டி.ஐ.ஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய சி. ஸ்ரீதர், சென்னை சி.பி.சி.ஐ.டி டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல பல அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications