காயிதே மில்லத்தின் 116வது பிறந்த நாள்-ஜெயலலிதா, தலைவர்கள் அஞ்சலி
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன மறைந்த இஸ்லாமியத் தலைவர் காயிதேமில்லத்தின் 116வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.
இஸ்லாமிய சமுதாயத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவர் காயிதே மில்லத். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை நிறுவியவர். சுதந்திரப் போராட்ட வீரர். இவரது 116வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஜெயலலிதா மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல, திமுக சட்டமன்றக்குழு தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் காயல் முஹம்மது அபுபக்கர், மாநில செயலாளர் லால்பேட்டை தளபதி ஷபீக்குர் ரஹ்மான், தேசிய லீக் தலைவர் வீரசோழன் பஷீர் அஹமது, முஸ்லிம் லீக் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications