தமிழக காங். தலைவர் சுதர்சன நாச்சியப்பன்?
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவராக சுதர்சன நாச்சியப்பன் அல்லது கார்வேந்தன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியைக் கொடுத்தனர் தமிழக மக்கள். 63 தொகுதிகளை திமுகவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மற்ற தொகுதிகளில் மகா கேவலமாக மண்ணைக் கவ்வியது.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வில் மெகா குழப்பம் செய்து கடைசியில் தானே போட்டியிட்ட தங்கபாலு கேவலமாக தோற்றார்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் மே 14ம் தேதியன்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், கட்சியின் புதிய மாநிலத் தலைவரை இன்று காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் எம்.பி. கார்வேந்தன் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது.
இவர்களில் கார்வேந்தன் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவராவார். சுதர்சன நாச்சியப்பன் தனி ஆவர்த்தனம் செய்து வருபவர்.
இன்று மாலைக்குள் புதிய தலைவர் நியமன செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications