தமிழக அரசு வழங்கும் இலவச லேப்டாப்- மாணவர்கள் விவரம் சேகரிப்பு

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ்டூ படிக்கும் மாணவர்களுக்கும், அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து லேப்டாப் தயாரிப்புக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. சமீபத்தில் டெண்டரில் விண்ணப்பித்த நிறுவனங்களை நேரில் அழைத்து அரசின் தேவைகள் விளக்கிக் கூறப்பட்டன.
முதல் கட்டமாக 9.12 லட்சம் மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி இலவச லேப்டாப்களை வழங்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை மாணவ, மாணவியர் உள்ளனர், எத்தனை லேப்டாப்கள் தேவைப்படும் என்ற கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது.
முதலில் பிளஸ் 1, பிளஸ்டூ மாணவர்களின் கணக்கெடுப்பு நடக்கிறது. அடுத்து கல்லூரி மாணவர்களின் விவரம் சேகரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications