ஆழ்வார்குறிச்சியில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம்: பேராசிரியர் கைது
ஆழ்வார்குறி்ச்சி: ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி. இக்கல்லூரி 50 ஆண்டு பழமைவாய்ந்ததாகும்.
இக்கல்லூரியில் மேலக்கரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் வேதியியல் பிரிவு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அவர்களில் பிடித்தமான மாணவிகளிடம் கைவைத்து பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே மாணவிகள் தரப்பு கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் செங்கோட்டையைச் சேர்ந்த சுமிதா என்ற எம்எஸ்சி படிக்கும் மாணவியிடமும் (சமீபத்தில் திருமணம் ஆனவர்) பலவிதமான இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசியுள்ளார்.
இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் முறையிடவே அவர்கள் பேராசிரியர் மீது மாவட்ட ஆட்சியர், டிஐஜி, கல்விதுறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். இதை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஆழ்வார்குறி்ச்சி போலீசில் மாணவி தரப்பு புகார் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேராசிரியர் பொன்னுசாமியை கைது செய்து நேற்று இரவு அம்பை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பேராசிரியர் பொன்னுசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மாணவிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications