பிரதமர் வீட்டை முற்றுகையிட நூற்றுக்கணக்கான அன்னா ஆதரவாளர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: ஜன் லோக்பால் விவகாரம் மேலும் பெரிதாகிறது. இன்று மாலை டெல்லியில்பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று முற்பகல் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஆதரவாளர்களிடையே அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சில நாட்களில் எனது எடை வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நான் கவலைப்படவில்லை. இப்படியே இன்னும் சில நாட்கள் என்னால் உண்ணாவிரதம் இருக்க முடியும்.

இந்த அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அது முடியும் வரை நான் சாக மாட்டேன். ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதைப் பார்க்காமல் நான் சாக மாட்டேன். எனவே யாரும் கவலைப்பட வேண்டாம்.

எனக்குப் பின்னால் கடவுள் இருக்கிறார். எனக்கு முன்னாள் இந்த தேசமே இருக்கிறது. இது போதும் என்றார் அன்னா.

பின்னர் பேசிய அன்னா குழுவினர், இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வருமாறு அன்னா ஆதரவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஏற்கனவே எம்.பிக்கள், அமைச்சர்கள் வீடுகளை ஊழல் ஒழிப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அஸ்ஸாமில் உள்ள பிரதமரின் இல்லத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள வீட்டை இன்று மாலை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டனர்.

அவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+