எல்லை தாண்டியதாக 40 இந்திய, பாகிஸ்தான் மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைகளுக்குள் சென்றதாக 20 இந்திய மீனவர்களும், இந்திய எல்லையை தாண்டியதாக 20 பாகிஸ்தான் மீனவர்களும் இரு நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய-பாகிஸ்தான் நாடுகளிடையிலான கடல் எல்லைகளை இரு நாட்டு மீனவர்களும் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதனால் இரு நாட்டு கடற்படையினரும், இரு தரப்பு மீனவர்களையும் கைது செய்வதும் வழக்கமாக உள்ளது.

இரு தரப்பும் கைது செய்து பின்னர் விடுவித்து விடுவர். இலங்கை கடற்படைக் கொலைப் படையைப் போல மீனவர்களைத் தாக்குவதோ, சுட்டு வீழ்த்துவதோ கிடையாது.

மேலும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மகா மெளனமாக இருக்கும். ஆனால் பாகி்ஸ்தான் கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை மீட்க கடுமையாக போராடும்.

நேற்று அரபிக்கடலில் உள்ள காஜர் சிற்றோடை பகுதிக்குள் புகுந்த 20 பாகிஸ்தான் மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செயதனர். அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய கடற்படையினர் தங்களை துப்பாக்கி முனையில் கைது செய்ததாக கைதான பாகிஸ்தானிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் பாகிஸ்தான் எல்லையை கடந்ததாக 20 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் கராச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய மீனவர்களிடம் இருந்து 4 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+