மதுரையில் மாமூல் கேட்ட பிரபல ரவுடி குத்தி கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மாமூல் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி சக்திவேல் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மதுரை தத்தனேரி சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சக்திவேல் (28). இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி 6 ஆண்டுகள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மீனாட்சி சுந்தரத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி சுந்தரம் அவரது உறவினர்கள் விஜயகுமார், ஜெயகுமார் ஆகியோரை அழைத்து வந்து சக்திவேலை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ரவுடி சக்திவேலை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிர் இழந்தார்.

இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனாட்சி சுந்தரம், ஜெயக்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+