லட்சத்தீவில் எல்லை தாண்டியதாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
கொல்லங்கோடு: ஆழ்கடலில் மீன்பிடித்து கரை திரும்பும் வழியில் லட்சத்தீவில் சிறை பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கொல்லங்கோடு வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான செல்வமாதா மீன்பிடி விசைப்படகில் வள்ளவிளையை சேர்ந்த ஜெகன், சேவியர், தோமஸ், அவுசேப், கிளாபின், விஜயன், குறும்பனையை சேர்ந்த பிரபு, பொழியூரை சேர்ந்த ஜான்சன் ஆகிய 8 பேரும் ஆழ்கடலில் மீன்படிக்க சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ம் தேதி தொழிலுக்கு சென்ற இவர்கள் ஆழ்கடலில் சில நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு 8ம் தேதி கரைக்கு திரும்பினர். இந்நிலையில் லட்சத்தீவு மரைன் போலீசார் இந்திய கடல் எல்லையை தாண்டியதாக இவர்களை பிடித்து போலீஸ் காவலில் சிறை வைத்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மாநில மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், எம்.பி. ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications