அத்வானி பாதையில் வைக்கப்பட்ட குண்டை கண்டுபிடித்த இருவருக்கு ஜெயலலிதா பரிசு
Subscribe to Oneindia Tamil

கடந்த 28ந் தேதி திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை செல்வராஜ் என்ற விவசாயி திருமங்கலம் ஊராட்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து செல்வம் போலீசாருக்கு தகவல் கொடுத்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
அவர்களின் இந்த அரிய செயலை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா இருவரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கி நேரில் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications