உபியில் நடப்பது மாயா ஆட்சியல்ல, மாஃபியா ஆட்சி: ராகுல் பிரசாரம் 'ஸ்டார்ட்'!

உத்தர பிரதேசத்தில் வரும் 2012ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தனது பிரசாரத்தை இன்று துவங்கினார். நேருவின் தொகுதியான புல்பூரில் இருந்து தனது பிரசாரத்தை துவங்கினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி கூறியதாவது,
உத்தர பிரதேசத்தில் மாஃபியா ஆட்சி நடக்கிறது என்று மாயாவதி ஆட்சியைக் குற்றம் கூறினார்.
இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கையில் உத்தர பிரதேசம் மற்றும் பின்னோக்கிச் செல்கிறது. பண்டல்கன்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு என்ன செய்தது? பட்டா பர்சோலில் போலீஸ் அராஜகத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது. இங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் அசையாது என்றார்.
ராகுலின் பிரசாரத்தை முன்னிட்டு ராகுல் காந்தி, நேரு சேர்ந்திருக்கும் பிளெக்ஸ் போர்டுகளும், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கும் பிளெக்ஸ் போர்டுகளும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
ராகுல் மாயாவதியின் ஊழல் அரசை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்வார் என்று ஒரு காங்கிரஸ் நிர்வாகி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications