மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: இரவோடு, இரவாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக அரசு கடந்த 8ம் தேதி் அன்று இரவோடு, இரவாக மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை திடீர் என்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நலப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் அதிமுக அரசு இவ்வாறு செய்துள்ளது என்று கூறிய திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், திடீர் பணிநீக்கத்தைக் கண்டித்து இன்று(15ம் தேதி) மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதேபோல் இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
திடீர் என்று பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீ்ண்டும் பணியமர்த்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டத்தின் முதல் கட்டம் தான். அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அப்படியும் ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.
ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகவே அதிமுக அரசு மக்களுக்கு விரோதமாக நடந்து வருகின்றது என்றார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications