கிங்பிஷருக்கு ரூ.1,200 கோடி வழங்கப் போகும் தனியார் முதலீட்டாளர்!
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்த நிறுவனம் ரூ. 7,000 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தில் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் ரூ. 2,000 கோடி வரை முதலீடு செய்துள்ளன.
நஷ்டத்திலிருந்து வெளியே வருவதற்கும் அன்றாட செலவுகளுக்கும் கிங்பிஷர் நிதி திரட்டாத வரை அதில் மேலும் முதலீடு செய்ய மாட்டோம் என இந்த வங்கிகள் அறிவித்துள்ளன.
இந் நிலையில் கிங்பிஷரில் இந்திய தனியார் முதலீட்டாளர் ரூ. 1,200 கோடி வரை முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும், அதே போல ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள் ரூ. 560 கோடி ($118 million) வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் மல்லையா தெரிவித்துள்ளார்.
ஆனால், மற்ற 13 வங்கிகளின் பெயரைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் முந்தைய கடனுக்கு வட்டியைக் குறைக்கவும் வங்கிகள் முன் வந்துள்ளதாகவும் அவர் அந்தப் பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
இவ்வளவு நிதியை முதலீடு செய்யப் போகும் அந்த இந்திய முதலீட்டாளர் யார் என்பது தெரியவில்லை.