கரூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம்
கரூர்: பணி நீக்கம் செய்யப்பட்ட தாந்தோணி நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூர் நகராட்சி, இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாந்தோணி நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வந்த 74 பேரை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீர் என்று பணிநீக்கம் செய்தனர். அவர்கள் சுய உதவிக்குழு அமைத்து வேலை கோரினால் அந்த குழுவுக்கு வேலை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தங்களை முன்பு போன்று நகராட்சி தினக் கூலியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 74 தொழிலாளர்களும் கடந்த 10 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் பழைய தாந்தோணி நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர்ந்து தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications