முல்லைப்பெரியாறு அணை உடைப்போகிறது: வந்த கேரள பஸ்களில் விஷமப் போஸ்டர்கள்
தேனி: முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் இருந்து தமிழகத்தி்ற்கு வந்த பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை போலீஸார் கிழித்தெறிந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசோ அதை சற்றும் கண்டு கொள்ளாமல், முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அணை கட்டியே தீருவோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தீர்க்கமாக உள்ளார்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை உடைந்து அதனால் ஏற்படும் அபாயங்களை சித்தரித்து மலையாள இயக்குனர் சோஹன் ராய் டேம் 999 என்ற படத்தை எடுத்து பீதியைக் கிளப்பியுள்ளார். இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது.
இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த சில அமைப்புகள் முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் இருந்து தமிழகத்தி்ற்கு வரும் பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தன.
நேற்றிரவு தமிழக எல்லைப் பகுதிகளான தேனி மாவட்டத்தின் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் இருந்த தமிழக போலீசார் பேருந்துகளில் முல்லைப்பெரியாறு அணை பற்றி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர். கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி அதில் இருந்த போஸ்டர்களை அகற்றும் பணி நேற்று இரவு முழுவதும் நடந்தது.
அப்படியே அவர்கள் கண்ணில் படாமல் அந்த போஸ்டர்களுடன் சில பேருந்துகள் தமிழகத்திற்குள் வந்தால், அந்த போஸ்டர்களை ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி சோதனைச் சாவடிகளில் வைத்து அகற்றிட போலீசாருக்கு தேனி மாவட்ட எஸ்பி பிரவீண்குமார் உத்தரவிட்டிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications