For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் வாயைத் திறந்தால் பலர் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் - ஆ ராசா

By Shankar
Google Oneindia Tamil News

Raja
டெல்லி: நான் வாயைத் திறந்தால் பலர் உள்ளே போக வேண்டி வரும். எனவே இப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கப் போவதில்லை. முதலில் கனிமொழி வெளியில் வரட்டும். பிறகு நான் ஜாமீன் பற்றி யோசிக்கிறேன், என்று ஆ ராசா தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். ஓராண்டாக அவர் திகார் ஜெயிலில் உள்ளார்.

இந்நிலையில் ஆ.ராசா நீதிமன்ற அறையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், "திகார் ஜெயில் வாழ்க்கை, தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட வகையிலும் என்னை மேலும் செம்மையாக்கி உள்ளது.

எனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து விட்டேன். சிறையில் இந்த புதிய வாழ்க்கையை கிட்டத்தட்ட 12 மாதங்கள் அனுபவித்து விட்டேன். இந்த இரண்டிலும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.

நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை. இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே நான் ஜாமீன் கேட்டு எந்த கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யவில்லை. நான் வாயை திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு விஷயத்தையும் நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் நிரந்தரமாகவே ஜெயிலிலேயே இருந்து விடுவேன் என்று நீங்கள் கருதி விடக்கூடாது. கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கட்டும் முதலில் கனிமொழி ஜெயிலில் இருந்து விடுதலை ஆகட்டும். அதன் பிறகு நான் ஜாமீன் மனுதாக்கல் செய்வது பற்றி யோசிக்கிறேன்," என்றார்.

English summary
Former Telecom Minister A Raja told that he wouldn't file his bail petition in any court at the present situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X