கட்டண உயர்வால் பஸ்களில் ஏறவே அஞ்சும் பயணிகள்-காற்று வாங்கும் அரசு பஸ்கள்!
சென்னை: பஸ் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை என்று தெரிகிறது. கடுமையான உயர்வு காரணமாக அரசு பஸ்களில் ஏறவே மக்கள் அஞ்சுகின்றனர். இதனால் சென்னையிலிருந்து வெளியூர் போகும் குறிப்பாக தொலை தூர ஊர்களுக்குப் போகும் பஸ்கள் காற்று வாங்குகின்றன. ஏறுங்க சார் என்று பயணிகளிடம் நடத்துனர்கள் கெஞ்சும் அளவுக்கு நிலைமை போயுள்ளதாம்.
சமீபத்தில் தமிழக அரசு பஸ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. மேலும் அதை இரவோடு இரவாக அமல்படுத்தியதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த அதிர்ச்சி போதாதென்று, பஸ்களின் நடத்துனர்கள் தாறுமாறாக டிக்கெட் போட்டு மக்களை மேலும் அதிர்ச்சியில் மூழ்கடித்தனர். அரசு சொல்லிய கட்டண உயர்வுக்கும், இவர்கள் வாங்கிய கட்டணத்திற்கும பெரும் வித்தியாசம் இருந்தது. மேலும், சாதாரண பஸ்களை அடியோடு குறைத்து விட்ட போக்குவரத்துக் கழகங்கள், எக்ஸ்பிரஸ் பஸ்களை அதிகரித்து விட்டது.
இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணமே 6 முதல் 10 வரை எகிறிப் போய் விட்டது. இது மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது பஸ் கட்டண உயர்வு காரணமாக மக்கள் ரயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். சென்னையில் புறநகர் ரயில்களில் வழக்கத்தை விட பல மடங்கு கூட்டம் காணப்படுகிறது.
இதை நிலைதான் சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களிலும் காணப்படுகிறது. வெளியூர் பஸ்களில் ஏறவே மக்கள் இப்போது விரும்புவதில்லை. மாறாக ரயில்களை நோக்கிச் செல்கின்றனர். குறைந்த கட்டணம், கூடுதல் சலுகைகள் என்பதால் ரயில் லேட்டாக போனாலும் பரவாயில்லை என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இதனால் பகல் நேர தொலை தூர ரயில்களிலும் கூட கூட்டம் அலை மோதுகிறது.
கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் வழக்கமாக எள் விழுந்தால் எண்ணெய் ஆகி விடும் அளவுக்கு கூட்டம் நெக்கியடிக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. துண்டை உதறி கீழே போட்டு விரித்துப் படுத்துக்கொள்ளலாம் போல. அந்த அளவுக்கு படு ப்ரீயாக இருக்கிறது பஸ் நிலையம். கூட்டத்தையேக் காணோம்.
பஸ்களிலும் கூட கூட்டமே இல்லாமல் காற்று வாங்குகின்றன. மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொலை தூர ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள்தான் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இந்தப் பஸ்களில் ஏற் மக்களைக் காணவில்லை. வெகு சிலர்தான் பஸ்களை நாடி வருகின்றனர். இவர்களும் கூட ரயில்களில் இடம் கிடைக்காமல் வருகிறவர்களாக இருக்கின்றனர். அல்லது கட்டண விவரம் தெரியாதவர்களாக உள்ளனர்.
இப்படி அடியோடு பயணிகள் கூட்டம் நின்று போய் விட்டதால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பஸ் கட்டண உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதைப் பயன்படுத்தி கூடுதல் ரயில்கள் விட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை கூடுதல் தொலைதூர ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பெரும் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்கிறார்கள்.
மொத்தத்தில் அவலை நினைத்து உரலை இடித்த கதையாகியுள்ளது அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிலை.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications