சீனா என்னை பேயைப் பார்ப்பது போன்று பார்க்கிறது: தலாய் லாமா
கொல்கத்தா: இந்தியா எனக்கு பேச சுதந்திரம் கொடுப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்று என்று திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தெரிவி்ததுள்ளார். சீனா தன்னை பேயைப் பார்ப்பது போன்று பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அன்னை தெரிசா பற்றி நடந்த விழாவில் திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கலந்து கொண்டார்.
தலாய் லாமா கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஆளுநரோ, முதல்வரோ கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி சீன தூதரகம் மேற்கு வங்க அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் தான் நாராயணன் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி விழாவுக்கு வந்துள்ளீர்களே என்று ஆளுநரிடம் கேட்டதற்கு, இது குறித்து நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
உங்கள் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்று தலாய் லாமாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
சீனா எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமான ஒன்று. அவர்களின் பார்வையில் அது சரி. அவர்கள் என்னை பேயைப் பார்ப்பது போன்று பார்க்கின்றனர். சீன தூதரகம் மேற்கு வங்க அரசுக்கு அனுப்பிய கடிதம் பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. கடந்த மார்ச் மாதம் அரசியல் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றேன். நான் இந்த பயணத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.
சீனா தலாய் லாமாவை எதிரியாகப் பார்க்கையில் இந்தியா அவரை ஒரு மதிப்புமிக்க மதகுருவாக பார்த்து அவருக்கு முழு பேச்சு சுதந்திரம் கொடுத்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரக் ஓ பிரெய்ன் தெரிவி்த்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications