தாலுகா அலுவலகம் ஜப்தி- 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரியும் அலுவலர்கள்

Subscribe to Oneindia Tamil

விளவங்கோடு: விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலிகள் குழித்துறை நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டதால் அலுவலர்கள் கடந்த 20 நாட்களாக தரையில் அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விளவங்கோடு தாலுகா அலுவலகம் குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தை பொறுத்தவரை போதுமான ஊழியர்கள் இல்லை என்ற குறைபாடு உள்ளது. இந்நிலையில் குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதற்கு 9 லட்சம் ரூபாய் வழங்க குழித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தவிட்டும் தாலுகா அலுவலகத்தில் இருந்து போதுமான நிதி வழங்கப்படாததால் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் கடந்த 10ம் தேதி ஜப்தி செய்யப்பட்டது.

ஆனால் அரசின் ஆவணங்கள் என்று கூறப்படும் பைல்களை தரையில் குவித்து வைக்கப்பட்டது. ஜப்தி நடவடிக்கை முடிந்து 20 நாட்கள் கடந்தும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தின் மத்திய பகுதி வெறிச்சோடி உள்ளது. ஊழியர்கள் எங்கு இருப்பது என்று தெரியாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து பணி புரிந்து வருகின்றனர். இதனால் அவசர சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்த தாலுகா அலுவத்தின் மீது இதை போல் 17 வழக்குகள் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போல் ஒரு வழக்கிற்கு ஜப்தி நடவடிக்கை நடந்தது. அந்த மேஜைகளுடன் சேர்ந்து இந்த மேஜை, பீரோக்களும் தற்போது கோர்ட் வளாகத்தில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+