ஆக்கப்பூர்வமான தலைமையின் அவசியம்: கலாம்
டெல்லி: சமீபத்தில் மத்திய யூனியன் சர்வீஸ் கமிஷன் நிறுவன நாளையொட்டி மூத்த அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகையில், ஆக்கப்பூர்வமான தலைமையின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
தலைவர்களுக்கு 9 முக்கிய பண்புகள் தேவை என்ற அவர், அத்தைய தலைவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டார். அதில் விஞ்ஞானிகள் எம்.எஸ்.சுவாமிநாதன், விக்ரம் சாராபாய், மெட்ரோ ரயில் புகழ் ஸ்ரீதரன் ஆகியோர் அடக்கும். இந்தப் பட்டியலில் இரு முன்னாள் பிரதமர்களையும் கலாம் குறிப்பிட்டார். இவர்களில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை, அவர் நரசிம்ம ராவ். இன்னொருவர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள வாஜ்பாய்.
ஆக்கப்பூர்வமாக தலைமைப் பண்புகள் கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது, இத்தனை பெரிய தேசத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்தப் பண்புகள் கொண்ட தலைவர்களாக விளக்குகின்றனர் என்பது கலாமின் பேச்சின் மூலம் வெளிப்பட்டது.
தனது உரையில் குஜராத் அரசு மேற்கொண்டு வரும் கிராமப் புற வளர்ச்சித் திட்டங்களையும் வெகுவாகப் பாராட்டினார் அப்துல் கலாம்.