2ஜி வழக்கில் எஸ்ஸார்-லூப் டெலிகாம் நிறுவன அதிபர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை

எஸ்ஸார் நிறுவன இயக்குனர் அனுஷ்மான் ருயா, துணைத் தலைவர் ரவி ருயா, குழுமத்தின் இயக்குனர் விகாஸ் சராப், லூப் டெலிகாம் உரிமையாளர்கள் கிரண் கெய்தான், ஐபி கெய்தான் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் ஏமாற்றுதல், கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை சிபிஐ முன் வைத்துள்ளது.
வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவன உரிமையாளர்களான ருயா சகோதரர்கள், அதை வோடபோன் நிறுவனத்திடமே சமீபத்தில் விற்றுவிட்டு தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் இருந்து வெளியேறினர்.
ஆனால், 2008ம் ஆண்டு வோடபோன் நிறுவன பங்குகளை தங்களிடம் வைத்திருந்த இவர்கள், 21 மண்டலங்களில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக லூப் டெலிகாமை பயன்படுத்தினர். லூப் டெலிகாமுக்காக என்று சொல்லி ரூ. 1,450 கோடிக்கு 21 மண்டலங்களில் 2ஜி லைசென்ஸை பெற்றனர். இதை இவர்களுக்கு ஒதுக்கித் தந்தவர் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா.
லூப் டெலிகாமிலும் இவர்களது வோடபோன் நிறுவனத்துக்கு பங்குகள் இருந்தன. இதன்மூலம் லூப் டெலிகாம் பெயரில் வோடபோனுக்கு முறைகேடாக இவர்கள் ஸ்பெக்ட்ரம் பெற்றனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு மண்டலத்தில் இரு லைசென்ஸ்களில் ஒரு நிறுவனத்துக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை மீற லூப் டெலிகாம் பெயரை பயன்படுத்தி வோடபோனுக்கு அதிகமான லைசென்ஸை பெற்றுள்ளனர் என்று சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது.
இதே வேலையைத் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாமும் செய்தது. ஸ்வான் டெலிகாம் பெயரை பயன்படுத்தி ரிலையன்சுக்காக ஸ்பெக்ட்ரம் வாங்கினர் என்ற குற்றச்சாட்டில் தான் அந்த நிறுவனத்தின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 7 மாதம் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் எஸ்ஸார்-லூப் டெலிகாம் வழக்கில் ராசாவையோ அல்லது தொலைத் தொடர்பு அதிகாரிகளையோ சிபிஐ சேர்க்கவில்லை. இதில் அதிகாரிகள் சேர்க்கப்படாததால், இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வராது. இதை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தான் விசாரிக்கும்.
இந்த வழக்கும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடக்கும் 2ஜி வழக்கு விசாரணையும் தனித்தனியே நடக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications