கூடங்குளம் குறித்த தமிழகத்தின் கவலைக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்- அச்சுதானந்தன்

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பயன்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த அறிக்கையை அச்சுதானந்தன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சுதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூடங்குளம் அணுமின்நிலையத்தால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என தமிழக மக்கள் கருதுகின்றனர். தமிழக மக்களின் இந்த நியாயமான அச்சத்தை மத்திய அரசு புரிந்து கொண்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அணுமின்நிலைய விஷயத்தில் தமிழக மக்களின் அச்சம் நீங்கும்வரை அதன் செயல்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும். அணுமின்நிலையம் தொடர்பாக தமிழக மக்கள் தங்களது அச்சத்தையும், பீதியையும் ஆட்சியாளர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளனர். இது தவிர தமிழக அரசும் மத்திய அரசுக்கு எழுத்து மூலமும் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வைத்து இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அணுமின்நிலையம் தொடர்பான தமிழக மக்களின் போராட்டத்தையும், அச்சத்தையும் ஏளனம் செய்யும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நமது பிரதமரின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் மதிப்பளிக்காத வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் செய்லபாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை மத்திய அரசு இனிமேலாவது நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications