லோக்பால் விவகாரத்தில் அன்னா அடம்பிடிக்கக் கூடாது: சிபிஐ
ஹைதராபாத்: லோக்பால் மசோதா விவகாரத்தில் அன்னா விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தின் முடிவுக்கே அன்னா விட்டுவிட வேண்டும். வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று இடதுசாரிகளும் விரும்புகிறோம். இது தொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசின் லோக்பால் மசோதாவில் சில குறைபாடுகள் இருக்கத் தான் செய்கிறது. அது குறித்து நாடாளுமன்றத்தி்ல் தான் விவாதித்து முடிவு எடுக்க முடியும்.
லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ-ஐ கொண்டு வர வேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தற்போது மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் சிபிஐ அமைப்பை தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும். சிபிஐ-ஐ லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது.
அன்னாவின் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சில விஷயங்களில் அவர் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். ஐனநாயகத்தில் நாடாளுமன்றம் உயர்வானது என்பதை அவர் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது,
லோக்பால் அமைப்புக்கென்று தனியாக விசாரணைப் பிரிவைத் துவங்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும். இது குறித்து மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications