புயல், வெள்ளம்: பிலிப்பைன்ஸ் மக்களுக்கு சோகமான கிறிஸ்துமஸ்
இலிகன்: கடந்த 17 தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ககடும் புயல் தாக்கி ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சோகமயமானது.
கடந்த 17ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை வாஷி என்ற புயல் தாக்கியது. இதில் பிலிப்பின்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள மிண்டானா தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த தீவில் உள்ள ககயான் டி ஓரா, இலிகன் உள்ளிட்ட துறைமுகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இதுவரை 1,236 பேர் பலியாகி உள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்த சுமார் 69,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பழைய இடங்களுக்கு திரும்ப குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். முகாம்களில் உள்ள பலரின் குடும்பத்தார் ள்ளத்தில் இறந்ததால், பழைய இடங்களுக்கு திரும்ப மக்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு வழங்கப்பட்டு. முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று உணவைப் பெற்றனர்.
இந்நிலையில் டிக்கிலான் என்ற கிராமத்தில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 422 பேர் உயிர் தப்பினர். இது குறித்து உயிர்ப்பிழைத்தவர்களில் ஒருவரும், டிக்கிலான் கிராம தலைவருமான அரிலியோ மகாரோ கூறியதாவது,
எங்களுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிக்கை சோகமானது. ஆனால் இந்த நிலையில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறேன். எங்களின் வீடுகள், சொத்துகள், பணம் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் நாங்கள் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications