மும்பை மாநகராட்சித் தேர்தல்: இழுபறிக்குப் பிறகு பவாருடன் சேர்ந்த காங்கிரஸ்
மும்பை: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தலில் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
மும்பையில் மாநகராட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. அதில் கூட்டணி பற்றி ஒரு முடிவுக்கு வருமாறு மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் காங்கிரஸுக்கு கெடு விதித்திருந்தார். இதையடுத்து அவரது கட்சியுடன் கூட்டணி வைக்க பேரார்வமாக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவும், தொகுதிப் பங்கீடு செய்யவும் இரு கட்சி தலைவர்களும் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் வீட்டில் சந்தித்து பேசினர். கடந்த 15 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி சிவசேனா-பாஜக கையில் இருப்பதால் காங்கிரஸால் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று சவான் நினைத்தார்.
அதனால் எப்படியாவது பவாருடன் கூட்டணி வைப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்தது. இதையடுத்து நேற்றைய பேச்சுவராத்தையின்போது பவார் 65 சீட் கேட்க காங்கிரஸ் 45 முதல் 50 தான் கொடுப்போம் என்று கூறியது. இதனால் பேச்சுவார்த்தை நெடுநேரம் நீடித்தது. இறுதியில் 58 சீட்கள் தர காங்கிரஸ் ஒப்புக் கொண்டதையடுத்து பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது.
இது குறித்து சவான் கூறியதாவது,
இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது. சிவசேனா-பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இரு கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர். சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications