சோனியா அழுகை: காங். தலைவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பாஜக கோரிக்கை
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளதாவது:
சோனியா காந்தி அழுதார் என்கிறார் சட்ட் அமைச்சர் சல்மான்குர்ஷித். ஆனால் அவர் அழுகவே இல்லை என்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்.
இரண்டு காங்கிரஸ் தலைவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள் என்பதை உண்மை கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தி அறிய வேண்டியுள்ளது.
1984-ம ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நிகழ்ந்த போது சோனியா அழுதாரா?
ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினரான பண்டிட்டுகளுக்கு எதிரான வன்முறையின் போது அவர் அழுதாரா?
டெல்லியில் 2008-ம் ஆண்டு பயங்கரவாதிகள் என்போரை சுட்டுக் கொன்றதற்காக ஏன் சோனியா அழுகிறார் என்றார் அவர்.
சரத்பவார் கருத்து
சோனியா அழுத விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் வேளாண் அமைச்சருமான சரத்பவார், டெல்லி என்கவுண்டர் சம்பவத்தை உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு எழுப்புவோம் என்றார்.
இருப்பினும் ஒரு விவகாரத்தில் அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்துவது சரியானது அல்லது என்பதும் பவாரின் கருத்து.