கடலூரில் மிக மிக தாழ்வாக பறந்த போர் விமானத்தால் மக்கள் பெரும் பீதி-பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil

கடலூரில் இன்று மக்கள் பயங்கர அனுபவத்தை சந்தித்தனர். போர் விமானம் ஒன்று மிக மிக தாழ்வான உயரத்தில், மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் படு வேகமாக பறந்து வந்தது. இதனால் மிகப் பயங்கர சத்தம் ஏற்பட்டது.
இதைக் கேட்டு கடலூர் மாவட்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். அதி வேகமாக விமானம் பறந்ததால் பல இடங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கடலூர் கலெக்டர் போர் விமானம் மிக மிக தாழ்வாக அதி வேகத்தில் பறந்ததால்தான் இந்த பயங்கர சப்தம் ஏற்பட்டது. வேறு ஒன்றும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications