முல்லைப் பெரியாறு ஓடும் பிரவம் தொகுதி இடைத் தேர்தலில் காங். வேட்பாளர் வெற்றி
டெல்லி: கேரளாவில் முல்லைப் பெரியாறு ஆறு ஓடும் பிரவம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அனூப் ஜேக்கப் வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.
சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை படு வேகமாக பெரிதாக்கின கேரள அரசியல் கட்சிகள். புதிய அணை கட்டப் போகிறோம், இடிக்கப் போகிறோம், அணை இடிந்தால் பல லட்சம் மக்கள் செத்துப் போவார்கள், ஊரெல்லாம் பிணமாக மிதக்கும் என்றெல்லாம் சிடி போட்டு, படம் எடுத்து மக்களை பீதியூட்டினார்கள். கேரளாவுக்குச் சென்ற தமிழர்கள் தாக்கப்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன.
இதனால் இரு மாநில மக்களுக்கிடையே பெரும் கசப்புணர்வு ஏற்பட்டது. கேரளாவுக்குப் பதிலடி தரும் வகையில் வரலாறு காணாத வகையில் தமிழகத்திலும் தாக்குதல்கள் வெடித்தன. தேனி மாவட்டம் கொந்தளித்தது, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தால் கேரளா அதிர்ந்தது.
இத்தனை அமளிகளுக்கும் காரணம், கேரள மாநிலம் பிரவம் தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தல்தான். அந்த தொகுதி வழியாகத்தான் முல்லைப் பெரியாறு ஓடுகிறது. எனவேதான் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு இந்த பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்படிப்பட் பிரவம் தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சியின் அனூப் ஜேக்கப் வென்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட் கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் எம்.ஜே. ஜேக்கப்பை விட அவர் 12,071 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு 82756 வாக்குகள் கிடைத்தன. கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு 70685 வாக்குகள் கிடைத்தன.
இந்தத் தொகுதியின் உறுப்பினராக அனூப் ஜேக்கப்பின் தந்தை டி.எம்.ஜேக்கப் இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் அனூப்பின் தந்தை வெறும் 157 வாக்குகள் வித்தியாசத்தி்ல்தான் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தற்போது காங்கிரஸ் கூடுதல் பலனைச் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் தற்போது காங்கிரஸ் கூட்டணியின் பலம் 71 ஆக உயர்ந்துள்ளது. கம்யூனிஸ்ட் கூட்டணியின் பலம் 67 ஆக உள்ளது. முதலில் 68 பேர் அக்கட்சிக்கு இருந்தனர். ஆனால் நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ செல்வராஜ் ராஜினாமா செய்து விட்டதால் பலம் ஒரு படி குறைந்து விட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications