TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள்
சென்னை: திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த குளறுபடியால் பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படும் என தேர்வர்கள் கவலை தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. அதன் இரண்டாம் கட்டத் தேர்வுகள் கடந்த மே 30-ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றன. திருவள்ளூர் லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 157 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு
நேற்று நடைபெற்ற தேர்வில் 'தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப் ஆர்டினேட்' (வினாத்தாள் எண் 137) மற்றும் 'தி அக்கவுண்ட் டெஸ்ட் பார் எக்ஸிக்யூட்டிவ் ஆபீசர்' (வினாத்தாள் எண் 152) ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 152-ஆம் எண் வினாத்தாள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு 137-ஆம் எண் வினாத்தாளும், 137-ஆம் எண் வினாத்தாள் பெற வேண்டியவர்களுக்கு 152-ஆம் எண் வினாத்தாளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தேர்வு முடிந்த பிறகே இந்த குளறுபடி தெரியவந்ததால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தேர்வு மையத்தில் இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் தங்களின் பதவி உயர்வு வாய்ப்பும், பணிவாழ்க்கை முன்னேற்றமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
அதிகாரியை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்
மேலும், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்வில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை டிஎன்பிஎஸ்சி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது அங்கிருந்து செல்ல முயன்ற அதிகாரி ஒருவரை சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முற்றுகையிட்டு கேள்விகளை தொடுத்ததால் சிறிது பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது புகார்களை மனுவாக எழுதி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?














Click it and Unblock the Notifications