மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு

நுகர்வோர் விலை குறியீட்டுக்கு ஏற்ப, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், அவர்களுக்கு 58 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பண வீக்க உயர்வில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
80 லட்சம் பேருக்கு பலன்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், மத்திய அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவு ஏற்படும். இந்த உயர்வால், சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.












Click it and Unblock the Notifications