திண்டுக்கல் நகராட்சி அதிமுக கவுன்சிலர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை!
திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் பழக்கடை நாகராஜ் வீட்டில், வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் நகராட்சி 15 வார்டு கவுன்சிலராக இருப்பவர் பழக்கடை நாகராஜ். இவர், திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில், பல கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். இதே போல மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், குமரன் திருநகரில் உள்ள இவரது வீட்டில், நேற்று மாலை 5 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 10 க்கும் மேற்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இந்த சோதனை கருத்து தெரிவித்துள்ள அதிமுக கவுன்சிலர் பழக்கடை நாகராஜ், எனது வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்தது உண்மை தான் என்றார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் தில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications