உடன்குடி அருகே அழகாக இல்லை என்று மனைவியை தாக்கிய கணவன், மாமியார்
தூத்துக்குடி: மனைவி அழகாக இல்லை என்று கூறி அவரைத் தாக்கிய கணவன், மாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள கொட்டாக்காட்டைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். அவரது மகன் சிவராஜுக்கும் லீலாவதி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 1 பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். லீலாவதி அழகாக இல்லை என்று கூறி அவரிடம் சிவராத் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிவராஜ் மற்றும் அவரது தாய் பூங்கனி ஆகிய இருவரும் சேர்ந்து லீலாவதியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் குலசேகரபட்டிணம் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகலா வழக்குப் பதிவு செய்து தாய், மகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.