தமிழகம் நம்பர் 1ஆக உழைப்பாளர்கள் உதவ வேண்டும்: ஜெயலலிதா மே தின வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
உழைப்பின் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் தொழிலாளர் தினமான மே நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம், தங்களின் உரிமைக்காகவும், நலன்களுக்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து உரிமைகளை மீட்டெடுத்த நாளே தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
""இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படைத்தவன் தொழிலாளி!
உருக்கு போன்ற தன் கரத்தையே நம்பி
ஓங்கி நிற்பவன் தொழிலாளி''
என்ற பாடலின் மூலம் தொழிலாளர்களின் சிறப்புகளை எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற எனது லட்சியப் பயணத்துக்கு தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications