குடிபோதையில் பாரில் ரகளை- போலீஸுக்கு அடி: பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மகன் கைது!!!

சீனிவாசனின் மகன் அஸ்வின். இவருக்கு வயது 40 ஆகிறது. இவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவராம். தனது தந்தை சீனிவாசன் நடத்தி வரும் ஐஎல்சி டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் குழுவில் இவரும் ஒருவர். கடந்த 2000மாவது ஆண்டு இவரே காசா மியா என்ற ஒரு நிறுவனத்தை சொந்தமாகவும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள எஸ்கோபார் என்ற பப்புக்கு தனது நண்பர் அவி கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் போனார். அங்கு இருவரும் மது அருந்தினர். நள்ளிரவு தாண்டியும் இவர்களின் கச்சேரி ஓயவில்லை. 1.30 மணியளவில் இன்னும் ஊத்திக் கொடுங்க குடிக்க என்று கேட்டுள்ளனர். ஆனால் இது கடையை மூடும் நேரம். இனிமேலும் பாரைத் திறந்து வைத்திருக்கக் கூடாது என்று பார் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் அதை இருவரும் கேட்கவில்லை. மாறாக பார் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் இறங்கினர்.
அதுவரை குடித்ததற்கான ரூ. 30,000 பில்லைக் கட்ட மாட்டோம் என்று வாதிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து பார் மேலாளர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக பில் தொகையைக் கட்டி விட்டு நடையைக் கட்டுமாறு அஸ்வினை போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் நிதானத்தில் இல்லாத அஸ்வின் போலீஸ்காரர்கள் மீது பாய்ந்துள்ளார். ஒரு போலீஸ்காரர் முகத்தில் குத்து விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அஸ்வினையும், அவியையும் அள்ளிக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.
இரவு முழுவதும் இருவரையும் காவல் நிலையத்திலேயே உட்கார வைத்தனர். அடுத்த நாள் காலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் போன்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் பிரஷருக்குப் பணிய நேரிட்டது காவல்துறை. இதையடுத்து அஸ்வினை போலீஸார் சொந்த பெயிலில் விடுவித்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகோங்கர் கூறுகையில், எஸ்கோபார் பாரில் பிரச்சினை என்று தகவல் வந்ததும் அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அங்கிருந்த இருவரில் ஒருவர் எங்களது காவலரையே அடித்து விட்டார். இதனால் அவரைக் கைது செய்தோம். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவரும் மது போதையில் இருந்ததை உறுதி செய்து கொண்டோம்.
அவர்கள் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரைத் தாக்கியது, மிரட்டல், அவதூறாக நடப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.
தற்போது ஜாமீனில் விடப்பட்டிருந்தாலும் அஸ்வினும், அவியும் திங்கள்கிழமை தோறும் பந்த்ரா காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
கிரிக்கெட் வாரியத் தலைவரின் மகன் குடிபோதையில் மது பாரில் அநாகரீகமாக நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications