புலிகளைப் பாதுகாக்க மாநிலங்களில் சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர்
டெல்லி: நாட்டின் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க சிறப்பு அதிரடி படைகளை உருவாக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 1,706 புலிகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
புலிகளை காப்பதற்காக அனைத்து மாநிலங்களும் சிறப்பு அதிரடி படைகளை உருவாக்குமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. இந்த சிறப்பு அதிரடி படைகளை அமைக்கும் பணிகளை அனைத்து மாநிலங்களும் விரைவுபடுத்துவதை உறுதி செய்யுமாறு புலிகள் காப்பக கள இயக்குனர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியப் புலிகள்..
உலகின் புலிகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இந்தியாவில் வசிக்கின்றன. அவற்றை காப்பதற்கு களப்பாதுகாப்பு மிகவும் முக்கியம் ஆகும். புலிகளை பாதுகாப்பதில் உள்ளூர் பணியாளர்களை அமர்த்துவதற்கு மத்திய அரசு பெரிய உதவி வருகிறது..
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 100 விழுக்காடு உதவி செய்தும் கூட சிறப்பு அதிரடி படைகள் அமர்த்தப்படவில்லை.
அதே நேரத்தில் சிறப்பு அதிரடி படைகளை உருவாக்கிய முதல் மாநிலமான கர்நாடகத்தைப் பாராட்டுகிறோம்.
புலிகளைப் பாதுகாப்பதற்கான நிதியை ரூ. ஆயிரத்து 216 கோடியே 86 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications