எனது மகன் தொடர்ந்து சட்டிஸ்கரில்தான் பணியாற்ற வேண்டும்-மேனனின் தந்தை வரதாஸ்
சென்னை: எனது மகன் அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்டிருக்கும் செய்தி எனக்கு வந்து சேர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. எனது மகன் விடுதலைக்காக பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று அலெக்ஸின் தந்தை வரதாஸ் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் அலெக்ஸ் பால் மேனனின் பெற்றோர் தங்கியுள்ளனர். அலெக்ஸ் விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அவரது தந்தை வரதாஸை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது வரதாஸ் கூறுகையில், சற்று முன்னர்தான் இந்த செய்தி எங்களுக்கு வந்தது. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இதற்காக முயற்சிகள் எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல ஆறுதல் கூறிய, எங்களை வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ். இளக்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், டி.கே. ரங்கராஜன் எம்.பி. மற்றும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விஷயத்தில் அக்கறை காட்டிய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன கொளத்தூர் எம்.எல்.ஏ. மு.க. ஸ்டாலினுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது தவிர எனது மகனை விடுதலை செய்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மகன் தொடர்ந்து அங்கேயேதான் பணியாற்றுவார். அவர் தொடர்ந்து அஙேகேயே பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. நான் விரைவில் சட்டிஸ்கர் செல்லவுள்ளேன்.
மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு மாநில அரசு உறுதியான, விரைவான, சமூகமான முடிவை எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வரதாஸ்.
சொந்த ஊரில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
இதற்கிடையே, அலெக்ஸ் பால் மேனனின் விடுதலையை அவரது சொந்த ஊரான வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. மேலும் அலெக்ஸுக்காக அவரது ஊர் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications