For Daily Alerts
Just In
புரமோஷனுக்குப் பிறகு ஜெயலலிதாவை சந்தித்த ஐபிஎஸ் அதிகாரிகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி வடக்கு மண்டல ஐ.ஜி சைலேந்திரபாபு கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். கரண் சின்கா ஆயுதப்படை ஏ.டிஜி.பி.யாகவும், பிரதீப் வி. பிலிப் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாகவும், மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.யான எஸ். ராஜேந்திரன் அதே பிரிவில் ஏ.டி.ஜி.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.யான எஸ் ராஜேந்திரன் அதே பிரிவில் ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
பதவி உயர்வு பெற்றதையடுத்து சைலேந்தர பாபு, ஆர்.சி. குடவாலா, பிரசாத் வி. பிலிப், கரண் சின்கா மற்றும் எஸ்.ராஜந்திரன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
Comments
English summary
IPS officers Sailendra Babu, Karan Sinha and 3 others met CM Jayalalithaa at the secretariat after they got promoted.
Story first published: Friday, May 4, 2012, 11:08 [IST]