நாளை முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பங்கள் வினியோகம்: விலை ரூ.500
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக மாணவர் சேர்க்கைத் தேர்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பத்தைப் பெற வரும் மே 30ம் தேதி கடைசி நாள் ஆகும். ஒரு விண்ணப்பக் கட்டணம் ரூ.500.
செயலாளர், தேர்வுக் குழு, கீழ்பாக்கம், சென்னை-10(The Secretary, Selection Committee, Kilpauk, Chennai -10) என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக வரைவோலையாக செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் மட்டுமே விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தை சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org மூலம் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications