ராசா ஜாமீனில் விடுதலை: 2ஜி வழக்கு நீர்த்துப் போகும்.. ஜெயலலிதா
போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,
கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆ.ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே?
பதில்: நீங்கள் சொல்லித்தான் இதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ஒன்றும் இல்லாமல் வலுவிழந்து போய்க் கொண்டிருப்பது போல தெரிகிறது.
கேள்வி: ஏர்செல்- மேக்ஸிஸ் நிறுவன விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்: இந்த விவகாரத்தில் தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டியது சுப்பிரமணிய சாமிதான். அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டியது ப.சிதம்பரத்தின் பொறுப்பு. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திடம்தான் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கேள்வி: தமிழ்நாட்டில் மணல் கொள்ளை பற்றி செய்திகள் வருகிறதே?
பதில்: அதுபற்றி நான் கேள்விபடவே இல்லை. இதுபற்றி பிறகு பதில் சொல்கிறேன்
கேள்வி: உங்களது ஓராண்டு ஆட்சியின் சாதனை குறித்து..?
பதில்: அது குறித்து பின்னர் கூறுகிறேன் என்றார்.