பணமில்லாத மமதா அரசு ரூ.20 கோடியில் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டம்: சிபிஎம்
கொல்கத்தா: பணக் கஷ்டத்தில் உள்ளோம் என்று கூறும் மமதா பானர்ஜி அரசு ரூ.20 கோடி செலவழித்து ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியுள்ளது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு அரசு ரூ. 20 கோடி செலவு செய்துள்ளது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ரூ.2 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது. அதனால் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்று புகார் கூறும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ரூ.20 கோடி செலவு செய்துள்ளது. இந்த ரூ.20 கோடியை ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தியருக்கலாம். மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்திருக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் உள்ள நிலையைப் பார்த்தால் சிபிஎம் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்காலத்தில் பொதுமக்களும் தாக்குதலுக்குள்ளாவார்கள் என்றார்.
சிபிஎம் உறுப்பினர்களை ஆளுங்கட்சியினர் தாக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்து தான் யெச்சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications