இங்கிலீஷில் எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை 'அபோலாஜி'... பாக்.குக்கு அமெரிக்கா!

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நேட்டோ படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்தது. அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்களும் வெடித்தன. பாகிஸ்தான் அரசும், கடும் கோபமடைந்தது. இதையடுத்து நேட்டோ படையினருக்கான சப்ளை வழிகளை அது மூடியது. மேலும் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகிறது.
ஆனால் இதுவரை அமெரிக்கா மன்னிப்பெல்லாம் கேட்கவேயில்லை. மாறாக வருத்தம் மட்டுமே தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சமீபத்தில் சிகாகோவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்க மறுத்து கடுப்படித்தார்.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று மீண்டும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், இதில் புதிதாக கூற எதுவும் இல்லை. ஏற்கனவே நாங்கள் அந்த சம்பவத்துக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து விட்டோம். விசாரணை தொடர்பான விவரங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளோம். எனவே மன்னிப்பு கேட்பது என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்வதைப் பற்றி மட்டுமே தற்போது யோசிக்க வேண்டும்.
அந்த குறிப்பிட்ட சம்பவத்திலேயே நாம் நின்றிருப்பது தவறானது, அவசியமற்றது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்று நாங்கள் பாகிஸ்தானியர்களுக்கு உறுதியளித்துள்ளோம். பாகிஸ்தானின் இறையாண்மையை மதிப்போம் என்று கூறியுள்ளோம் என்றார் அவர்.
சிகாகோவில் சர்தாரியை ஒபாமா அவமதித்து விட்டாரே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், உண்மையில் அதிபர் ஒபாமா மற்றும் அதிபர் சர்தாரிக்கு இடையே எந்தவிதமான கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்படவே இல்லை. பிறகு எப்படி அவமதிப்பு என்ற வார்த்தை எழ முடியும் என்று திருப்பிக் கேட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாகத்தான் இந்த மாநாடே நடந்தது. எனவே ஆப்கன் அதிபர் கர்ஸாயை மட்டுமே அதிபர் ஒபாமா சந்தித்தார். வேறு யாரையும் அவர் சந்தித்துப் பேசவில்லை என்றார்.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications