சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் ஷோபனா அறிவிப்பு
கரூர்: சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த, பாரசீக வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதலாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த, பாரசீக வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் முந்தைய கல்வியாண்டின் இறுதித் தேர்வில் (முதல் வகுப்பைத் தவிர ) 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பிற்பட்டோர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் உதவித் தொகை ஏதும் பெறக் கூடாது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவ, மாணவிகள் தங்களது புதிய அல்லது புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அவ்வாறு மாணவ, மாணவிகளிடம் பெறப்படும் விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்குரிய சான்றுகளை இணைத்து, உரிய படிவத்தில் பதிவு செய்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 25ம் தேதி ஆகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications